Wednesday, December 14, 2016

திருப்பாவையில் திவ்ய தேசங்கள் :

திருப்பாவையில் திவ்ய தேசங்கள் :
அரசிளம் குமரர்கள் உணவில் பிடிதோறும் நெய் சேர்க்குமா போலே , திருமங்கை ஆழ்வார் 
தம் பாசுரங்களில் அடிதோறும் அர்ச்சை சேர்ப்பார் என்பது பூர்வாச்சார்ய வசனம்.

அதுபோலே ஆண்டாள்தன் திருப்பாவையில், அவள் நினைத்தோ நினையாமலோ பல 
திவ்யதேச எம்பெருமான்கள் அந்தந்த பாசுரங்களை தந்தமக்கு ஆக்கிக் கொண்டமை 
நேர்த்தியோடு பொருந்தி வருவதும், தமிழ் பிரமாணங்கள் பின்னே அவ்வவ் எம்பெருமான்கள் 
செல்வார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டு இதோ :
மார்கழித் திங்கள் - நாராயணனே நமக்கே பறை  தருவான் - பரமபதம்.
வையத்து - பாற்கடலில் பையத் துயின்ற - க்ஷீராப்தி.
ஓங்கி - ஓங்கி உலகளந்த உத்தமன் - திருக்கோவலூர்.
ஆழிமழை  - பாழியம் தோளுடை பத்மநாபன் - திரு அனந்தபுரம் .
மாயனை - வடமதுரை மைந்தன் - மதுரா .
புள்ளும் - வெள்ளத்தரவில் அமர்ந்த வித்து - திருவண் வண்டூர்.
கீச்சு கீச்சு - கேசவனைப் பாடவும் - திருவாய்ப்பாடி.
கீழ்வானம் - தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் - பெருமாள் கோயில், காஞ்சி
தூமணி மாடம் - குன்றின்மேல் விளக்கு - திருக் கடிகை.
நோற்று சுவர்க்கம் - நாற்றத் துழாய்முடி நாராயணன் - திருக்காட்கரை.
கற்றுக் கறவை - முகில் வண்ணன் பேர் பாட - காளமேகப் பெருமாள் திருமோகூர்.
கனைத்திளம் - தென் இலங்கை கோமானை சேற்ற மனத்துக்கு கினியான்  - தில்லை திரு சித்திர கூட்டம்.
புள்ளின்வாய் - பள்ளிக் கிடத்தியோ - திருக்குடந்தை.
உங்கள் புழக்கடை - நாவுடையாய் - செந்தமிழும் வடுக்கலையும் திகழ்ந்த நாவர்  - தேரழுந்தூர்.
எல்லே - மாற்றாரை மாற்றழிக்க வல்லான் மாயன் - திருவல்லிக்கேணி.
நாயகனாய் - மாயன் மணிவண்ணன் - திருக்குறுங்குடி.
அம்பரமே - அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமான் - சீர்காழி.
உந்து மத களிறு - பந்தார் விரலி மைத்துனன் - திருநறையூர்.
குத்து விளக்கு - மலர்மார்பா - திருவிடவெந்தை.
முப்பத்து மூவர் - செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன் - திருப்பாடகம்.
ஏற்ற கலங்கள் - ஊற்றமுடையாய் பெரியாய் - பெரும்புறக் கடல் - திருக்கண்ண மங்கை.
அங்கண்மா ஞாலம் - அரசர் அபிமான பங்கமாய் வந்து தலைப்பெய்து - திருமாலிருஞ் சோலை.
மாரி மலை முழஞ்சில் - பூவை பூ வண்ணா - திருவரங்கம்.
அன்றிவ் உலகம் - குன்று குடையாய் - கோவர்த்தனம்.
ஒருத்தி - கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமால் - திருக்கண்ண புரம்.
மாலே மணிவண்ணா - ஆலின் இலையாய் - வடபெரும்கோயில் (ஸ்ரீ வில்லி புத்தூர்).
கூடாரை வெல்லும் - சீர் கோவிந்தா - திருவேங்கடம்.
கற்றுக் கறவை - குறை ஒன்றுமில்லாத கோவிந்தா - விருந்தாவனம்.
சிற்றம் சிறுகாலை - பறை கொள்வான் கோவிந்தா - துவாரகை.
வங்கக் கடல் - அணிபுதுவை - ஸ்ரீவில்லி புத்தூர்.
-- P B அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி தொகுத்ததில் எடுத்தது.


No comments:

Post a Comment