உவந்தவந்த ணர்தெய்வ மாடு.
பிரம்ம ஞானப் பிரபாவம் :
இறையறிவாம் மெய்யறிவுத் தீயினுள் பாபம்
இரையாய் உருமாயும் மற்று -- அறியாப்
பிழையவையும் தாமரை தன்இலைமேல் நீர்போல்
இழையவொட்டா தேபோம் அகன்று.
அனுபவித் தேயற வேண்டுமாம் பாபம்
அனுபவி யாதவை மாயல் -- தானுமென்
என்னில் நெருப்பினை நீர்தணித்தல் போல்கருணை
முன்னால் கருமம் விலகு .
மாடுகன்று ஒன்றின்றி பாலர் களும்ஒளித்தான்
மொட்டவிழ் தாமரை மேலான்தான்; -- தேடல்வாய்
அவ்வவையாய் தானாகி மாயனே மாறல்போல்
எவ்வெவையும் தன்னுள்ளாய் தோற்று.
பொதுக்காரணி சிறப்புக் காரணி ஆகாவகை :
நீரால் நிலமால் ஒளியால் விதைமுளை
காரணிதான் ஆக்குமோ அவ்வகை -- பாரில்
அவரை துவரை என;தீதும் நன்றும்
அவரவராக் கம்மற் றில.
ஜகதுபாதான காரணம் பிரஹ்மம் :
மாடுகன்று ஒன்றின்றி பாலர் களும்ஒளித்தான்
மொட்டவிழ் தாமரை மேலயனும் -- தேடல்வாய்
அவ்வவையும் தானாகி மாயனே மாரினாப்போல்
எவ்வெவையும் தன்னுள்ளாய் தோற்று.
பாலே மருந்து :
அடிஇரண்டும் காப்பு இனிமை அடியார்
படிஎன்றால் அம்மால் அவனின் -- படியும்
அதுவே! பிடித்துச் சுவைத்து சகடம்
உதைத்து நடத்து மவன் .
அகவிதழும் புறவிதழும் :
உள்நாட்டுத் தேசு உடன்கூடி செய்அடிமை
வள்ளல்மால் வானோர்தம் நாயகர்க்கு -- உள்ளத்தே
உள்ளாம் உயிர்தன் நிறம்பெறலும் மேல்நாடாம்
கள்ள உடலைக் கரந்து .
361. ஸககார நிரபேக்ஷோ உபாயம் :
இராக்கதர் தின்ற உடல்காட்டி வந்து
அறிவிப்பார் தாங்களாக ஏபரமே! -- சேர
வரும்நம் வீடணற்கு இக்கரை போந்த
பரமாவா என்னும் அது.
உபாய அத்யவசாயம்:
தன்முயற்சித் தான்ஏது மின்றி அவன்கையே
தன்உயர்த்திக் காம்பழு தில்உபாய -- மென்பயிற்றுச்
சோம்பிக் கிடப்பார் உறவும் அபிமானம்
நம்பி ஒருபா இரு.
ஸ்வகத ஸ்வீகாரம் நம்நிலை :
சேயன் எளியன் திருமா மகள்கேள்வன்
தூயவின் நாமம் பலபலவும் -- வாயின்
மொழிதல்மால் தன்னை அணைந்துகால் கட்டும்
வழியதாய் நாடல் கடை.
பரகத ஸ்வீகாரம் ஆழ்வார் நிலை :
நோன்பும் நியமும் தன்முயற்சி கோலுவார்
அன்றியருள் ஞான விளைநிலமாம் -- என்புடல்
கூடவேர் பற்று கழற்றாதார் போலாழ்வார்
நாடும்மால் அன்றோ வழி.
சித்த சாதன நிஷ்டை :
பலன்கரு தாது முயல்வார் இலையாய்
நலன்வேண்டின் நாமியற்றல் கூடும்!-- சொலப்புகில்
மாலோலன் தம்முயற்சி கோலாதார் அம்முயற்சி
தோலா வகையார் செயல்?
கருமம் கைங்கர்யத்தில் புகும் :
செயலொன்றும் நம்மால் பயன்மூன்று நீடும்;
உயப்படு நேர்பயன் போல்துணைப் -- பயன்,காணாச்
சூழப்பயன் என்றிவை கோலா கருமத்
தெழுபயன் மாலவன் தொண்டு.
யாதாத்மிய ஞான விகாசம் :
செயல்அறிவு பக்தி திருத்தாள் பரிவிவைமேல்
மேயகருமம் நான்கதூம் மால்தொண்டு -- தூய
உயிர்பால் மிளிர்வவன் இட்ட வழக்கென்
துயக்கித் தனைத்தான் நீடு.
அத்தாணிச் சேவகத்தில் பொதுவானது நழுவும் :
பிராட்டி ஸ்வசக்தியை விட்டாள் .
திரௌபதி லஜ்ஜையை விட்டாள் .
திருக்கண்ணமங்கை ஆண்டான் ஸ்வவியாபாரத்தை விட்டார்.
இப்படி உபாயத்துக்கு அதிகாரிகளான பிராட்டியும், திரௌபதியும், திருக்கண்ணமங்கை ஆண்டானும் போலே
உபேயத்துக்கு அதிகாரிகள் இளையபெருமாளும், பிள்ளை திருநறையூர் அறையரும் . சிந்தையந்தியும் ஆவர்.
இவர்களின் அவஸ்பேயாக்ஷிதங்கள் :
பிரியில் தரியாமை .
தன்னைப் பேணாமை .
ஏவிக் கொள்ளவும் வேணுமாம்.
ஸது நாகவர ஸ்ரீமான்;
அந்தரிக்க்ஷ கத ஸ்ரீமான்;
லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பன்ன:
என்றிருக்கிற உபேயத்துக்கு அதிகாரிகளின் அத்தாணி சேவகத்தில், பொதுவானது நழுவும். அவர்களுக்கு ஸ்ரீமத்வம் அதுவே.
ஆற்றல்,பெண் பாலார்தம் கூச்சம், சுயத்தனம்
பற்றுப்பான் தாள்பற்றும் ஆறதில் -- நிற்றார்க்கும்;
அற்றபற்று நோற்றுப் பெறல்விழை தொண்டதூம்
மாற்றமில் சேவகத்தே வல்.
ஆற்றல் - ஸ்வசக்தி
பெண்பாலர்தம் கூச்சம் - ஸ்த்ரீத்வ தனமாகிற லஜ்ஜை
சுயத்தனம் - ஸ்வ வியாபாரம் என்றிவை
பற்றறுப்பான் தாள்பற்றி நிற்பார்க்கு - உபாயத்தில் தீக்ஷித்தவர்களுக்கு
தூற்றதாம் - நிக்ருஷ்டமாய் விடத்தக்கவை.
அற்றபற்று நோற்று - ஆகிஞ்சின்ய அநன்யகதித் வாதிகளை முன்னிட்டுக் கொண்டு வகுத்த சேஷி பக்கல் பண்ணின சரணாகதிக்கு அனந்தரபாவியான
பெறல்விழை தொண்டதூம் - பிரார்த்தித்து பெறவேண்டிய ஸகஜ தொண்டுதனை
மாற்றமில் - ஸமிக்ஞா சூசித ஆக்ஞா ரூபேண /அதவா/ அவன் புன்சிரிப்புக்கு உசிதமாய்
ஏவல் - சேஷித்தானும் தன்முகப்பே ஏவி
சேவகத்து - பணிகொள்ளவேண்டும்
என்ற இத்தால் ''அருள்பாடிட்டு ஸ்ரீகார்யம்'' கொள்கையாகிற அவன் மதித்த கைங்கரியம் செய்யப்பெற வேண்டும் என்கிறது. அதுவும் ''இறைவா நீ தாராய் பறை'' என்பத்துக்குச் சேர நாமுகக்கமது அன்றி அவனும் நாமுமாய் உகக்குமதும் அன்றி அவனுக்கப்புக்காகவே அமைய வேண்டுமாகிற அனுபந்தம் இதிலே அடங்கும்.
மரணாந்தாநி வைராணி :
(பகவத் பிரவிருத்தி விரோதி ஸ்வபிரவ்ருத்தி நிவிருத்திஹி சரணாகதி).
இறந்தபின் நம்பால் அவன்செய் விரோதம்
துறந்தானாய் மாயும் அதுவால் -- உறவினன்நீ
செவ்வே கருமம்செய் வீடணா! என்பணித்த
அவ்வே விலக்காமை காப்பு!
பாகவத ஸமிர்த்தி :
தன்னடியார் நோக்கி அருள்வான் அரங்கனார்
முன்னடி போக்கியவர் பின்நடக்கும் -- அன்பனவன்
சூழ்த்தொடையல் காணாக்கண் பாழ்த்தமுகத் துப்புண்;
தொழாக்கை யன்றுலக் கை .
பாகவத பரிபூர்த்தி :
அடியார் அவர்பழிப்பும் தம்பால் கொடையாய்
நுடியா தவைஇசைவார்க் கன்றோ? -- ''கடியார்
துளப முடியார் அடியான்'' எனுமவ்
வளப்பம் உடைத்தாய் முடிந்து.
371. விஷ்ணுநா வியபதேஷ்டவ்ய :
கிராம குலாத்தி பரிமாற்றம் வேண்டாதே
''இராமா நுசன்தன் அடியானென்'' -- கூறு
மொழியே உகந்து உபசரிப்பார் நாடி
வழிபடலே மாலின் உகப்பு.
குருபரம்பரையை விடுத்த த்வயாநுசந்தானமும்
தேவதாந்திர பஜனத்தொடே ஒக்கும்:
குருமார் நினைவு இறையுணர் முன்னம்;
திருவார் பரிவும் அவர்சேர் -- நெறியாய்
மறைசேர் பயன்வாய் துறைசேர் சரண்தாள்
முறையார் முயல்வார் குறித்து.
வான் இளவரசு வைகுந்தக் குட்டன் :
(போக, போக்கிய, போக்த்ருத்வம்)
ஆடரவின் சூழ்தொடையில்; புட்சிறகான் வீழ்நிழலில் ;
வீடுலகில் சேனாநி சேண்பிரம்பின் -- ஆடுவான்
வாழ்முதலாம் நம்மின் உயிர்முதலாய் விண்ணுளார்
சூழ மகிழ்முதலாம் ஆங்கு .
புருஷம் கரோதி புருஷகார :
தேவன் ஒருவன் குறியது கூறிடில்
மேவல் முடியல் இடையே -- சுவைத்தல்
வியன்பட யார்செயல் தெய்வமவன் நம்பால்
இயல்பினன் செய்வாள் திரு.
சோர சதுஷ்டயம் :
கன்னக் களவு கொளுவார் நால்வராவார்;
தன்னை உயர்த்தி படைத்தவன் -- தன்னை
அவரனாய் இன்னும் குணமிலை கீழ்மேல்
அவனதில்லை என்பார் அவர்.
அவாப்த ஸமஸ்த காமத்வம் :
இதைவிட ஈது எனவாய் மிகைப்படா
யாது முடிவோ அதுவீடு -- அத்தை
அடைய அனைத்ததன் இன்சுவை கூடா
அடைவார்க்கு காமம் முடிந்து.
பகவத் பாதோதகம் பாவநம்;
பாகவத பாதோதகம் ஸுபாவநம் :
காயசுத்தி ஆறின் வருநீறு; ஆன்மசுத்தி
பாயும் சடைச்சாறு ஆஅதன் -- மேயபால்
சாணத்தின் சாறதனின் தூயதே மாலடியார்
மாணத் திருவடி சாறு.
குணபால மத யானை :
ஈட்டிய புண்ணியம் பெற்றாலும் கிட்டுமோ?
மட்டில் பெரும்பாபம் செய்வானைக் -- கூட்டுமோ?
பட்டத்து யானை செயுமவை ஆராயும்
திட்டத்தோ? எற்றாவன் யான்?
கடக்க கிருத்யம் :
தன்வழி தானும் வருவானை நேர்படுத்தி
நம்வினை போக்கி அடிசேர்ப்பாள்; -- மன்கருணை
மாயா வகைதிரு மால்குணம் காப்பளாம்
தாயவள் தம்கருணை காப்பு.
பாரதந்திரிய, அநன்யார்ஹத்வங்கள் :
பெற்று மறந்து முடிந்து பிழைக்கலாம்
பாற்று பிராட்டி தனைராமன் -- தூற்றின்வாய்
கானகம் போக்கினும் அன்னை முடிந்திலளாய்
வானகம் வேட்டா திருப்பு.
381. உபாய ஸ்வபாவ ஸ்வரூபம் :
தாமரையாள் நோக்காமால் தான்கார்யம் செய்வானேல்
கோமான் இறையாண்மை கொத்தையாய் -- தமர்அது
மெச்சும்? அவள்வேட்ட ஈதல் நிறமாய் (ஸ்வபாவம்)
இச்சை உயிராம் (ஸ்வரூப) குணம்.
ஸ்தூணான் நிகனந் நியாயம் :
அன்னை அருளால் அடியான் எனவாகித்
தன்னை அடைந்தார்க்கு ஆங்களித்த -- பின்னை
பிழையது ஆகா வகையே குறையங்
கிழையா தலுங்குவார் கோல்.
குணகோடியிலாம் தோஷம் உபாதேயம் :
குவிதல் விரிதல் இலையாய மேனி
குவிதல் மலர்தல் இவைதான் -- புனைதல்
குணமோ எனபிணக் காவார் அடியார்
அணைய மகிழ்வான் திறம்.
பக்தபக்ஷபாதம் கேடல்ல மாடு :
உதங்க பிரச்னத்துக் குத்தரம் நீடா
சுதந்திரன் பத்தரவர் சார்ந்தே-- உதகலதும்
வேண்டுதல் வேண்டாமை இல்லாதான் வாழ்குணமாய்
கொண்டாடப் பாற்றக் குணம்.
மங்களாசாசனத்துக்கு பலவியாப்பத்தி அதுவே :
வாழிவாழி என்றேத்த வாய்க்குமத் தொண்டதும்
கேழில் பயனாம்; பிரிதொரு -- சாழல்
இலையாய அவ்வடிமை தானும் பணிசெய்
தலதேல் சீவியா பண்பு.
ஸ்வரூபாநுரூபமான கைங்கர்யமேலும் பிரார்த்தித்த பெற வேண்டும் :
உன்னை விடுத்தபிரி தொன்றை கொடுத்து
எம்மை விலக்காதே கொள்ளடிமை; -- நன்மை
நமக்கத்துவால் வேட்டுமது ஈட்டி உவகை
உமக்கது என்றுகொள்நாட் டே!
மாம் -அஹமின் அர்த்தம் மால் - ஆலின் இலையாலில் ஸுவியக்தம்:
கடலின் குளப்படி எற்றோ நெடியமால்
மாடுடை மாலின் மயக்கத் -- தடங்கும்
நமக்குடைக் காதல்! இடுசிவப்பு மேன்மை;
தமக்குடை அவ்எளிமை பீடு.
முக்த போகம் :
தம்மையே தாம்தமர்க்கு நல்கி வெலவருவான்
தம்பால் எதிரம்பு பூட்டாதே -- உம்மால்
இனித்தோற்றோம் என்றிருப்பார் பக்கல்தாம் தோற்பார்
நனிநல்கல் முக்தபோ கம்.
தன்னைப்போல் ஊரும் நாடும்:
இறையுள நற்குணம் குற்றமிலாப் பண்பரேனும்
யாரே குவலயத்தில் யாதும் -- குறையிலார்?
புண்ணியன் கண்ணன் நண்ணி இருப்பார்க்கு
திண்ணமனி இல்லை அவா!
தனக்கேயாய் எனைக்கொள்ளு மீதே :
அடிமைக்கண் ஆனந்தம் தன்னதன்றி தேவன்
படியாய் இளவல் இருவர் -- அடிமையும்
நீடு மிடத்துமே அத்தலைக்கு ஏற்புடைத்தாய்
நாடும் நமக்காதல் பின்பு.
391. தன்னை முன்னிடுவாரை தான்முன்னிடுகை ஸ்வரூபம் :
அனுகரித்து சொன்னவை ஒன்பதோடு ஆன
பனுவல் இருபத்தும் தானாய்க் -- தனித்துப்
பணித்த நெரவலொன்றும் கோதைதன் பாவைக்
கணியாதல் ஆழ்வார்முன் னிட்டு .
சாத்திய விளைநிலம் சரீரம் :
தன்னைத்தான் நேசியாதார் உண்டோ? பொருளில்,மின்
பொன்னில்தான் ஆசை இலையேனும் -- பெண்ணில்
புதல்வரில் நிற்ற நசைஅறுனிம் உற்றதன்
பூதவுடல் ஏசல் இலார்.
கிட்டி அட்ட விட்டார் முட்டாள் :
தன்மேலாம் ஆசை உடலோடே தாம்மடியில்
என்னாம் பிறவி பெறும்பயன்? -- மின்னின்
நிலையில மன்னுயிர் ஆக்கையால் விண்ணோர்
நிலையதை எய்தற்க மற்று.
பகைவர்க்கு அருள்செய் பரமே !
நமக்கின்னா செய்ப்பவர்க்கு நம்பெருமாள் விம்மி
அவர்கின்னா செய்வான் எனவால் -- நமர்கன்னார்
செல்த்தீங்கு நாமெண்ணல் உண்டோ? கூரேசர்
போல்பகைவர் பால்இரங்காய் நெஞ்சு!
நமக்கின்னா செய்ப்பவர்க்கு - 'உண்ணும் சோறு, பருக்கு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்', 'கிருஷ்ண நாதா: கிருஷ்ணாஸ்ரயா: ஸ்ரீ கிருஷ்ணப் பிராணா:' என்று இருக்கிற ஆழ்வார் போல்வார்களை அவலம்பித்திருக்கிற அஸ்மாதாதிகள் விஷயத்தில் அசக்ய பாவத்தோடே காரணமின்றி துவேஷத்தோடே இருப்பவர் பக்கல் ;
நம்பெருமாள் - 'ஸகிருத் ஏவ பிரபந்நாயா தவாஸ்மி இதீச யாசதே , அபயம் ஸர்வ பூதேப்யோ ததாம் ஏதத் விரதம் மம' என்று ஒருமுறை காலில் விழுந்தவர் விஷயத்தில் பூத, பௌதிக, தெய்வாதிகளால் வரும் எந்த ஒரு ஆபத்தையும் போக்குகிற அவகாச நிரீக்ஷிதனாய் இரண்டாற்றின் நடுவிலே இருக்கிற நம்பெருமாள் ;
விம்மி அவர்கின்னா செய்வன் - பிரஹ்லாதனுக்காக வந்த ஒரு நரசிம்மனாக, தன்னை வீழ்த்த முடியாது தவித்த இராவணன், தன்னை யுத்தகளத்தில் சுமந்து நின்ற ஹனுமான் மேல் சரவர்ஷம் வர்ஷிக்க, 'கோபஸ்ய வசமே இவ ' என்று கோபத்துக்கு அருளப்பாடு இட்ட இராமனாக , தனக்கு ஒருவரும் விரோதி இல்லை ஆயினும், தன்அடியார் விரோதிகளை தன்விரோதியாகக் கொண்டு பொங்கி புறப்படுதாலிகிற
எனவால் - ரக்ஷணத்தை நிரீக்ஷித்தவனாய் அவ்வெம்பெருமான் இருக்க
நமர்கன்னார் செல் தீங்கு - எமன்வாயில் அந்த நம்முடைய விரோதிகள் விழவேண்டும் என்று
நாமெண்ணல் உண்டோ - ஆசௌசமான அந்த தாழ்ந்த எண்ணத்தை ஏறிடுவார் அல்லவே?
கூரேசர் போல் பகைவர்க்கு - பகவத் இராமாநுசர் மேல்நாட்டுக்கு எழுந்தருளவும், தன்னுடைய கண்கள் இரண்டும் போகவும் காரணமாக இருந்த நாலூரானுக்கும் வீடு பேற்றை விழைந்த கூராத்தாழ்வான் போல பகைவர்கள் இடத்திலும், தங்களுக்கு வரும் இன்னல்கள் தமக்கு கர்மாதீனமாக ஏற்பட்டது, எய்தவன் இருக்க அம்பை நோவான்என் என்கிற கணக்கிலே வசா, மனசா, கர்மணா ஒரு தீமையும் ஆஸாஸிக்காத சகஜ இரக்கத்தோடே வர்த்தித்தலாகிற ;
இரங்காய் நெஞ்சு! - 'அவர் நாண நன்நயம் செய்து விடல்' என்றாப் போலே, பொறையும், கிருபையும் கொள்வாய் - என்று தன் நெஞ்சுக்கு உபதேச மாக்குகிறர் இந்த ஸ்ரீசூக்தி யாலே.
பொறையாவது - ஒன்று செய்தாற்கு இரண்டு விளைய மீதூறி நினையாமை. கிருபையாவது - பாகவதா பசாரமுகேண பகவன் நிக்ரஹத்துக்கு ஆளாகி, இவனுக்கு நரகம் சம்பவிக்குமே எனஇரக்க புத்தியோடாகல் உயர்ந்த ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம். இது எளிதில் வராது. எண்ணம் முயற்சியின் பால் இருக்கட்டும் என்று ஸ்வநியந்ரணா பிரயத்னமாக அவதரித்த பாசுரம் இது என்று கொள்க
உபாய உபேய ஐகமத்வம் :
நெறிவாசல் தானாய் இவன்முயற்சி வேண்டா
அறிவொடு தன்கையே தேடல் -- முறையா
விரும்பும் தகைவீ டளிக்கும் இயல்பாம்
திருமால் திருவுள்ளம் தேடு .
மாயனார் ஒய்(வு)வீடு :
காடுமேடு அன்று நடந்தகால் கள்கழனி
மோடுதேடி சென்றதோ? கச்சிநகர் -- மாடநீடு
ஆளரவம் நிச்சலும் எச்சுத்தா தென்னேரி
மீளவரும் மால்விடாய் ஆற்று.